April 8, 2007


பத்தொன்பது வயதுப் பையன்
ஒரு நீளமான வசனம் பேசிமுடிக்கும்போது
பெரும்துளிகளாய் மழை ஆரம்பித்தது.
அம்மா சொன்னாள்,
'அச்சச்சோ, கொடியில் துணி காய்ஞ்சிட்டிருக்கே!'
'இல்லம்மா, நனைஞ்சிட்டிருக்கு!'
உடன் வெளிவந்த சிரிப்புடன் மகள் சொல்ல
அப்பாவும் சிரித்தார், பக்கத்து இருக்கையை பாதிக்காத வண்ணம்.
சிரிப்பு நல்ல விசயந்தானே?

No comments: