April 7, 2007


அருகிலே ஒரு

தொடுவானம்வரை பரவியிருக்கிறது
பச்சைப் புல்வெளி.
குறுக்காக மேற்கு நோக்கிச் செல்லும்
ஒற்றையடிப்பாதை.
அங்கும் இங்கும் தனித்தனியாய்
இன்னும் காடாக மாறாத மரங்கள்.
கிளைப்பிரிவில் பறவைக்கூடாய்
குச்சிகளும் முட்களும் அதன்மீதான வைக்கோல் பரவலும்.
இணையாய் நடக்க ஒற்றையடிப் பாதை தோதல்ல;
புல்லில் இறங்க வேண்டும்.
ஏற்கனவே இறங்கியிருக்கும் பனித்துளி
காலணியற்று நடக்கையில்
மேகத்தை உரசிச் செல்வது மாதிரியான
மிதக்கிற உணர்வைத் தரும்.
தென்றல் மட்டுமே காற்றின் வடிவமன்று.
சற்றே பலமான காற்றில்
கூடு சிறிது கலைந்து
முட்துண்டொன்று தரைவிழுந்து
மறைந்திருக்கும் புல்லினூடாக.
அடுத்த காலடியில் காத்திருக்கும்
முள்பதம் கண்டு
கைப்பிடித்து
தன்பக்கம் இழுக்குமாம் நட்பு.

(03.08.2001)
_____________________________________________
* முதல் முயற்சியிலிருந்து திருத்தப்பட்டது.

No comments: