April 24, 2007


உதவி செய்வதன் பொருட்டு நீ அறிந்து கொள்ள வேண்டியது

நாளை உனக்குக் கிடைக்கும் ஓலையை
தானமிட்டபின் அவனிடம் வாசித்துக் காட்டு;
நட்பே ஆனாலும்
உதவியதும் மறக்காமல்
ஓலையின் சேதியைச் சொல்லு;
உயிர்காத்தாயென யாரேனும் ஓடிவந்தால்
மீண்டும் வாசித்துக் காட்டு;
உணர்ச்சிமிகு கணங்களுக்கென
மனனம் செய்து கொள்;
அது உனது மந்திரமாகட்டும்!

No comments: