February 22, 2009


"அணி செய்வதே கவிதையின் பணி"

(அணிபவருக்கும் அடிபணியாதவருக்கும்)

பேச்சு-உணர்ச்சி-வேகம்-
மேடை-மௌனம்-தோல்வி-
காட்சி-கனவு-அழகு-
உருவம்-முதல்-உடை-
கவிதை-கருத்து-குரங்கு-
வாழ்த்து-கடவுள்-தேசம்-
பக்தி-உத்தி-ஊதுபத்தி

February 7, 2009


சூரியன் உச்சந்தலையைத் தாண்டிப் பச்சைக்குதிரை ஆடும்

ஓட்டுவீட்டுத் தொடரின்
பி்ன்னால்
ஒட்டிக்கொண்டு, ஓடிச் சென்று,
பள்ளி மைதானத்தின் ஓரமாய்
ஓர் ஏரியாகிறது சாக்கடை

நோட்டுகளின் வெண்மையில்
இணைந்து பாயும் கோடுகள்-அவை
நீலமென்கோடுகள்,
உள் அடங்காமல் மீறுகின்றன
சிறிய பென்சில் கோடுகள்

எல்லாத்திசையிலும் தொடுவானம்,
எத்திசையும் ரயில்சத்தம் அறியாதே!
தண்டவாளம் எப்போது துண்டானது?
”டண்ங்”
எங்கிருந்து நேரம்சொல்ல வந்தது?

யாருமற்ற மைதானத்தை
ஒரு வாத்துக்கூட்டம் சுற்றுகிறது,
ஒரு வாத்து நடை தவறி
விழுகிறது,
எழுகிறது, கூட்டமே பறக்கிறது