December 14, 2008


மொழியாமொழியின் உறைவிடங்கள்

1

மரம்போல்வ மாந்தர் மொழிசொல்லார் அவ்வழியே
சொல்மொழியாக் காதலரைக் காண்

சொல்லினும் செய்தல் மிகநன்று செய்தபின்
சொல்லார்க்கு இல்லை நிழல்

தம்புகழைச் சொல்வோன் வருந்துவான் தம்மொழியைக்
கேட்போன் அறியான் எனின்


2

ஓர் உயிரும் ஓர் உடலும் சேர்ந்த பிணைப்பு உறுதியானதா?
இரண்டு உயிர்கள் சேர்ந்த பிணைப்பு உறுதியானதா?
உடலைக் கொண்டாடுவோர் சிலர்
உயிரை வருத்துவோர் சிலர்


3

தனிமனிதனுக்கு மொழியில்லை,
மனிதன் மொழிக்கு உயிர் தருகிறான்,
மனிதன் தோற்றுவிடுகிறான்

3 comments:

naadal said...

good, is that kural satisfies all conditions to be a kural?? I did not remember all rules. Great you could write marabhu

இப்னு ஹம்துன் said...

அற்புதம். அற்புதம்.
மெல்ல மெல்ல
கடல்மீதொரு சிட்டுக்குருவியாகிறேன்.

இரா. சுந்தரேஸ்வரன் said...

நன்றி இப்னு ஹம்துன்!