November 30, 2008


மையங்களற்ற வையங்களில்

நீண்டு கிளைக்காமல் மீண்டும் அகலமாகும் பாதைகளில்
பூத்திருந்த மரங்களும் சில புல்லாங்குழல்களும்
தொலைந்துவிட்டன நாட்களுக்கான விதைகளைத் தராமல்

கடவுளர்கள் முன்பே இறந்து போய்விட்டார்கள்
குரல்கள் கரைகின்றன, நெரிசல்கள் மிகுகிறது, பாதைகளில்
இனி உண்மைகளைக் கண்டறியத் தேவையில்லை

படிக்கட்டுகளின் எல்லைகளில் கட்டிடங்கள் நிற்கின்றன
படிக்கட்டுகளில் அர்ச்சுனர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்,

கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் பிரதிபலிக்கும்
ஒற்றை வானத்தில் வெளுத்த மேகங்களின் பயணங்கள்!
பலப்பலப் பயன்கள் பொதிந்த பொருட்கள் நிறைந்த அறைகளின்
வெளிச்சுவர்களை உரசிச் செல்கின்றன தென்றல்கள்!

No comments: