November 5, 2008


இரண்டு நாட்களுக்கிடையில் ஒரு பழம்

(தேவதச்சனுக்கும் வில்லியம்ஸுக்கும்)

இரண்டு நாட்களுக்கிடையே
நான் சிக்கியிருக்கிறேன்,
நான் இங்கே தனித்தில்லை,
என்னிடம் ஒரு புகைப்படம் இருக்கிறது,
அதை எடுத்துப் பார்க்க முடியாதபடி,
அசைய முடியாதபடி, நான் சிக்கியிருக்கிறேன்,
இல்லை, நான் எதையும் யோசிக்கவில்லை,
இந்த நிலைத்த கணங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

No comments: