November 15, 2008


மலையின் மீது காலையும் மாலையும்

சிலபொழுதுகளில்
வானத்தைத் தாங்கிக் கொண்டிருப்பது போலவும்
சிலபொழுதுகளில்
வானத்தைக் கூராகக் குத்துவது போலவும் தெரிந்த
மலையுச்சி,
உச்சியை அடைந்ததும்
சமதளமாக
அமர்ந்துகொள்ளத்தக்கதாக இருக்கிறது;
மலைகள்,
வானத்தைத் தொடுவதே இல்லை;
தொடுவானம்,
கீழிறங்கித் தெரிகிறது, மலையின் மீதிருந்து காணும்போது;
தொடுவானத்திற்கும்
கீழே, முதலில் நிகழ்ந்து விடுகிறது காலை;
அதோ
காலையை அல்லது மாலையை நோக்கிச் செல்கின்றனவே,
அவற்றோடு
நாமும் நகர்ந்து கொண்டிருக்கிறோம்;
நாம்
பார்த்துக் கொண்டே இருக்கும்போது,
காலை
நிகழ்கிறது இந்தத் தொடுவானில், அது போலவே
மாலை
நிகழ்கிறது அந்தத் தொடுவானில்

1 comment:

naadal said...

Is it inspired by the old tamil poem "Oongal idai thontri Ongal idai maraiyum angavatrull..."