October 19, 2008


ஒளிந்துகொள்ள ஆயத்தமாகும்போது

எந்த உடை அணிந்துகொள்வதென மெனக்கெடாதே,
உன்னுடைய அனைத்து உடைகளும்
உன்னுடைய நிறமேறி இருக்கின்றன,
உன் உடைதான் உன்னுடைய அடையாளம்,

நீ ஒரு சிங்கத்தோடு வசிக்க வேண்டும்
என்னும் விருப்பம் கொண்டிருந்தாய்,
உனக்கான குகையின் பங்கை சிங்கத்திடமிருந்து
எப்படியும் பெற்றுவிடுவாய் எனச் சொன்னாய்,

சிங்கம் நன்னடத்தைகளைக் கொண்டது
என்னும் நம்பிக்கையும் உனக்கு இருக்கிறது,
உன் எண்ணங்கள் சிறந்த நோக்கங்களையே கொண்டிருக்கின்றன,
ஆனால், விளையாட்டாகவே நீ அதைச் சொன்னாய்,

உனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கிறது:
வாசலைத் தாண்டியதும் கண்ணுக்கெட்டும் தூரத்தில்
பூக்கள் தென்படுமா? நீ கற்ற எண்களின் இடமதிப்புகள்
பூக்களை எண்ணிக்கையிடப் போதுமானதா?

இடையே கரும்பூக்களைக் கண்டால்
என்ன செய்வதென வருத்தம் கொண்டிருக்கிறாய்,
பூக்களை விட, நாளின் எத்தனை தருணங்களில்
நீ மகிழ்வாக இருக்கிறாய் என்பதுதானே உனக்கு முக்கியமானது?!

1 comment:

naadal said...

i did not get it, possibility is you are too abstract??