October 20, 2009


"...அந்த ஓவியத்திலிருக்கும் கிணற்றின் ஆழம்

மந்தமாய் நின்றிருக்கும்
                                    ஆட்டைப் பார்த்து நடக்கும்
நாய்—பாவனையாய்.
                                நடுவில் சலசலவென ஓடும்
நீரோடைக்குப் பகல்கரைகள்—எப்போதும்
முற்பகலும் பிற்பகலும்.
                                   இருபுறமும்
மறைந்திருக்கும் மனிதமுகங்கள்—
                                                   நம் முகம்!

                                §

மழைக்காலத்தில் தொலைந்த நகரம்—
நீர்த்த கடலின் நிறம்.
                                குறைநிலவு
ஏறிச் செல்ல படகு இல்லை.
                                            உன் ஈரதூரிகை—
பாலத்தின் கீழிருக்கும் புதுநீரில் மிதந்தாடும்
பாலத்தின் நிழல்!

                                §

அடுக்கி வைத்த ஐந்நூறு—
                                       கண்ணில் விழும்
ஐம்பது அறுபது.
                         பசியுடன் பாரு!
                                                 ஒற்றை ஆப்பிள்
சுவை வேறு!

1 comment:

நந்தாகுமாரன் said...

நல்லா இருக்குங்க ... தலைப்பே ஒரு ஒற்றைவரிக்கவிதை