August 13, 2009


இன்னும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது

என் காதல் கவிதை இன்னும் தாமதமாகிக் கொண்டிருக்கும்போது, கவிதை பற்றி பேசவேண்டி வந்துவிட்டது. ”நிறைவேறாத ஆசைதான் கலையைத் தூண்டிவிடுகிறது” என்றான் டோனி. நாங்கள் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தோம். வட்டமான சிறிய மேசைக்கு வெண்ணிற மேசைவிரிப்பு, அதற்கு மேலே மஞ்சள் ஒளி விளக்கு! விளக்கைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருந்தோம் என்று சொல்லலாமோ? "தச்சன் ஏன் மந்திரவாளை பூக்களுக்கிடையில் மறைத்து வைத்தான், குட்டி இளவரசிக்கென செய்த கட்டிலில்?" என்று கேட்டான் அபி. அந்த மஞ்சள் விளக்கு, ஒரே சமயத்தில் எங்கள் நால்வரையும் பார்த்துக்கொண்டு இருந்தது போலிருந்தது. ”நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் நடுவில்தான் கலை தத்தளிக்கின்றது” என்று டோனி திரும்பச் சொன்னான். ”நிறைவேறாத ஆசை கொண்டவர்கள் பேயாக அல்லவா அலைவார்கள்?” என்று சொல்லி முடித்தான் கே.வி.எ.

1 comment:

naadal said...

எனக்கு இந்த கவிதை புரிவதற்கு இன்னும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது