April 28, 2009


நிழலின் விளிம்புக்கு வெளியே நிலவொளி

ஒரு நாள் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள், அப்போது, எரிந்துகொண்டிருக்கும் ஆவணங்களையும் புகைப்படங்களையும் காட்டி, ’இவை எதுவுமே உண்மை இல்லையா?’ என்று கேட்பார்கள், அவர்களுக்கு என்னிடமிருக்கும் ஒரு முழுநிலவின் படத்தைக் காட்டுவேன், உண்மையில் அது முழுநிலவல்ல, பௌர்ணமிக்குப்பின் ஒருநாள் தேய்ந்த நிலா, இல்லை, அது பௌர்ணமிக்கு முந்திய தினத்து நிலவு, அப்படித்தான் அவர்கள் ஏமாந்தார்கள், முதலில். அவர்களிடம் எரியும் நெருப்பைக் காட்டி, ‘அங்கே வெற்றுக் காகிதங்களும் எரிகின்றன, அவை மரங்கள் வீழ்ந்ததன் ஆவணம்’ என்பேன்.

2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க.

இரா. சுந்தரேஸ்வரன் said...

நன்றி ஜ்யோவ்ராம்!