April 13, 2009


ஓவியம் விற்பவனும் முற்பகலும்

அவனது உடல் சென்ற முறைக்கு இப்போது மெலிந்திருந்தது, நான் உள்ளங்கையை மடக்கி, காற்றை வெளியேற்றி, இறுக மூடிக்கொண்டேன், அவன் தலைக்குப் பதிலாக, நெற்றியில் குட்டினேன், அப்படியே அவனது புறங்கை விரல் எலும்புகளின் மீதும் குட்டினேன், அடுத்து அவன் தலையில் குட்டினேன், நெற்றி-புறங்கை-தலை என்ற வரிசையை மாற்றிக்கொண்டே இருந்தேன், அவனும் பதிலுக்கு அடித்தான், என் கன்னத்தில் அறைந்தான், சில அடிகள் என் தோள்பட்டையில் விழுந்தன, பத்துப்பதினைந்து குட்டுகளில் அவன் முகத்தில் வலியின் நிறமேறியது, மேலும் சில குட்டுகளைப் பெற்றுக்கொண்டு அவன் வேறுவழியில் சென்றுவிட்டான்.

1 comment:

naadal said...

வெயில் ம‌டும‌ல்ல‌ , ஓவிய‌ம் வாங்குப‌வ‌னும்தான் குத்துகிரான்