September 20, 2008


வெளியே கொண்டாட்டமில்லை

வலி முதலில் வேதனையைத் தருகிறது,
வலியேற்பட்டவுடன் எல்லோரும் சொல்லிக்கொள்வது:
'இது தற்காலிகம்தான், தானாகச் சரியாகிவிடும்',
அதுவே முதல் நம்பிக்கை

பிறகு வலி அப்படியே இருந்தாலும்,
குறைந்தாலும், வேதனை பெருகுகிறது,
அதுவே அடுத்த கட்டத்திற்குத் தள்ளுகிறது,
ஒரு நுட்பமான வலியினை நோக்கி.

அவ்வலி ஒருவரும் பார்க்க இயலாதது,
பிறகு நீ வேதனைப்படுவதில்லை,
நீ வலியைக் கொண்டாடுவதில் மும்முரமாகிறாய்,
நீ வெளியே வருவதில்லை

No comments: