August 5, 2008


ஒரு கோடு-மறு கோடு அல்லது தூண்களின் பாடல்

உன்னுடைய விருப்பவுணவுகளின் அளவும்
பட்டியலும் சிறுத்துப் போவதையும், சிறுத்துப் போன
உனது உடை குட்டிப்பிசாசுக்கு அணிவிக்கப்படுவதையும்
உன் நண்பர்களிடம் எச்சரித்தாய்

உன்னுடைய சொற்களிலிருந்து எனது இரண்டாவது
மொழியை நான் சீரமைத்துக் கொண்டிருந்தபோது
சுவர்களும் எறும்புகளும் பண்டங்களும் சொன்னது
கவனிக்கப்படாமல் தொலைந்துபோனது

எங்கோ வேறுபொழுதில் வைத்த எதையோ,
நீ தேடிக்கொண்டிருப்பாய்; நீ தேடுவது கிடைக்கவில்லை
என்றால், என்னிடமிருக்கும் பொம்மையைப்
பறித்துப் பதுக்கிவைப்பாய்

'நல்ல அடையாளமாய்' வீட்டு முகப்பிலிருக்கும்
தூண்களில் ஒன்றில் சாய்ந்துகொண்டு, தோட்டத்திலோ
தொட்டியிலோ பூச்செடி வைக்கமுடியாத ஆதங்கத்தை
அம்மா பாடிக்கொண்டேயிருப்பாள்

3 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை மிகப் பிடித்திருக்கிறது.

தலைப்பு என்புரிதலுக்குத் துணையாயிருந்தது.

இரா. சுந்தரேஸ்வரன் said...

நன்றி ஜ்யோவ்ராம்!

naadal said...

suthamma puriavillai ; ithai purinthavargalum irrukirargal enbathil mahizchi. PoRuluRai koduthal nallathu.