July 2, 2008


'இரவைக் கைப்பற்றி'

'எதையும் எவ்வித பிரமிப்பும் இன்றி காணும்'
P.ன் ஓவியங்களில், பலவேறு வடிவங்களில்
நிலவு சிந்துவது ஒளியா, ஒளியென்னும் மாயமா
என்பது விசாரணைக்குள்ளாகியிருக்கிறது

பூமியின் குறுக்காக ஓடுகிற ஓர் ஆற்றுவரி
மீது பறக்கும் நாரை, நீரில் மிதக்கும் நிலவு,
இரண்டும் முறையே மீனாலும் நாரையாலும்
இழுத்துச் செல்லப்படுகின்றன கடல் வரையிலும்

நட்சத்திரக்கொத்துகள் வரை பரவிய ஆழமான இரவு
பகலைவிடப் பெரிதானது, பாதையில் படர்ந்து,
கூரையின் மேலும் கீழும் படர்ந்து, அனைத்தையும்
அது நனைக்கிறது, அல்லது அணைக்கிறது

2 comments:

naadal said...

Anyway , I read 5 times the second stanza to understand , I hope i succeeded finaly .....

Venkat said...

Simple and good.Keep it up.