July 16, 2011


வயலில் நிற்கும் கரும்பாறை

அவ்வழியில் யாரும் இல்லை அந்நேரத்தில், நீர் நிறைந்திருந்த வயலுக்குள்ளே பெரிய கரும்பாறை நின்றிருந்தது வழிதப்பிய யானை போல, கையில் நாம் கேமரா வைத்திருக்கவில்லை ஆதலால், நாம் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை, மலை ஏறுவதற்கு முன், அத்தகைய புகைப்படத்தில் நம் முனைப்புகள், எழுச்சிகள், துரிதங்கள் எல்லாம் நம் முகமலர்ச்சியுடன் சேர்ந்து நம் நம்பிக்கையாய் படிந்து நமக்கு நன்னம்பிக்கை தரும் எப்போதும்

நம்பிக்கையே இல்லாமல், ஆனால், மலைமுகடுவரையுமே வேகமாக ஏறி வந்துவிட்டோம், எதுவுமே தெரியவில்லை, மேலே வானமும் தெரியவில்லை, கீழே பூமியும் தெரியவில்லை, இந்த முகட்டுக்குத்தான் புகைமுகடு என்று பெயர், விறுவிறுவென ஏறி வந்த காரணத்தால் தளர்ந்து கனன்றுகொண்டிருந்த உடல், எச்சிந்தனைகளையும் எழவிடாமல் துடைத்துக்கொண்டேயிருந்தது, நாம் ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தாலும் பார்வையை வெகுவாகக் குறைத்து நம்மைச் சுற்றி சூழ்ந்துகொண்டிருந்தது புகை

No comments: