January 10, 2008


கதையின்பம்

நானோ நீயோ எளிதாக மறுத்துவிடக்கூடிய
சம்பவங்களைக் கொண்டிருந்தாலும், என் கதையைத்தான்
நீ எழுதியிருக்கிறாய் என்பது தடயங்களில் தெரிகிறது:

வெயிலுடன் அவன் பேசிக் கொண்டிருக்க, அவன் நிழலிருந்த சிறு பூ
காற்றில் ஆடி, அவனறியாமல் எட்டி எட்டி சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்க,
அவனது வயிற்றில் பசி மெதுவாக எழ...

சங்கேத மொழியில் செல்லப் பெயராய் தொனிக்கும்
ஒரு நபருக்குச் சமர்ப்பித்திருக்கிறாய், உன் புத்தகத்தை;
அது ஒரு பிராணியாய் இருக்கலாம் என்பது என் ஊகம்

'என் ஊனம் ஒரு வியாதி போல குணமாகி விடும்'
என்று நம்பிக்கையான ஒரு கதைமாந்தர் சொல்வது போல்
ஏதாவது ஓர் அத்தியாயத்தினை நீ முடித்திருக்கலாம்

ஆனால், பூவின் ஓரிதழ் மட்டும் வாடியிருக்க,
அவ்விதழை உயிரூட்ட அதன்மீது ஒரு துளி ரத்தம் சிந்தியது போல்
மேலட்டை அமைக்கப்பட்டிருப்பது ஏன்?

1 comment:

Anonymous said...

Excellent sundar.... It looked like a very ordinary poem, But after reading again and again .. I felt the pleasure in reading it..

Man.. You are an extradinary poet..

Its like a modern art, only few can understand the Beauty ... this poem is like a diamond, people need immense knowledge light to enjoy the beuaty.